காலையில் வந்து நிற்பவளை வீடே ஆச்சர்யத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் பார்த்தது. நடந்தவைகளைச்சொன்னாள். சொன்னவள் அதோடு நிற்கவில்லை. அடுத்து அவள் கேட்டதுதான், அனைவரையும் கலக்கமடைய வைத்துவிட்டது.
" அப்பா, அவரோட வாழப்பிடிக்கலை. எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்க"
எல்லோரும் அவள்மேல் இருக்கும் தப்பை எடுத்துக்கூறினர்கள். யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை. தன் முடிவிலேயே விடாப்பிடியாக இருந்தாள். நடுவில் பல முறை ராகவன் வந்தான். வீட்டில் உள்ள அனைவரிடமும் எடுத்துச்சொன்னான். ராதாவிடம் பேச முயன்றான். ஆனால், பேச மறுத்துவிட்டாள் அவள்.
பேசி பேசிப்பார்த்து வெறுத்துப்போன அவள் அப்பா, "விவாகரத்து என்ற முடிவில் நீ உறுதியாக இருந்தால், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ" என்று சொன்னவுடன், 'சரி' என்று வீட்டை விட்டு வந்தவள், கலாவின் வீட்டு மாடியில் குடி வந்து இதோ ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ராகவன் எத்தனையோ முறை முயன்றும் அவள் பேசவேயில்லை.
ராகவன் சந்தேகப்பட்டதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி என்னை சந்தேகப்படலாம் எனபதை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தாளே தவிர, வேறு எந்த விசயத்தையும் யோசிக்கவில்லை. கலாவும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, அந்த மேட்டரை பற்றி பேசுவதையே விட்டு விட்டாள்.
பழைய விசயங்களை அசைப்போட்டபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் உடனே கிளம்பத்தொடங்கினாள், இன்றுதான் குடும்ப நல கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். கலா வருகிறேன் எனச் சொல்லியிருந்தாள். கலா ஒரு கால் செண்டரில் வேலை பார்ப்பதால் வாரத்தில் மூன்று நாள் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் முடிந்து வந்து விட்டாளா? என்று பார்ப்பதற்காக மாடிப்படியில் எட்டிப்பார்த்தாள். அப்போதுதான் ஒரு கார் வந்து இறங்கியது. காரின் உள்ளேயிருந்து இறங்கினாள் கலா. அவள் இறங்கும்போது அவள் கூட வந்தவன் கலாவைப் பார்த்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துச்சென்றது ராதாவைத் தவிர யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன கண்றாவி இது?
ராதாவை பார்த்த கலா, " யேய் ஒரு அரை மணி நேரம் டைம் கொடு, குளிச்சிட்டு உடனே வரேன்" என்றவள், இவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினாள்.
அரை மணி நேரம் கழித்து இருவரும் ஆட்டோவில் கோர்ட்டுக்கு புறப்பட்டார்கள். ஆட்டோவில் போகும்போது ராதா கேட்டாள்,
"யாருடி அவன்?''
" யாரைச்சொல்லற, என்ன ட்ராப் பண்ணவறா?"
"ஆமாம்"
"எங்க பாஸ், ஏன் கேக்கற?"
"அவரைப்பார்த்தா நல்லவரா தெரியலையே?"
"இப்போ உனக்கு என்னத் தெரியணும், டைரக்டா கேளு"
" இல்ல அவர் உன் கூட வந்ததப்பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சதே?"
" ஆமா, நீ நினைக்கறது சரிதான்"
"அப்படீன்னா?"
" அவர் அப்படி, இப்படித்தான், கொஞ்சம் ஜொல்லு பார்ட்டி"
" நீ எப்படி இந்த மாதிரி ஆளோட?"
"ராதா, கொஞ்சம் ஓப்பனாவே சொல்லறேன். என் ஹஸ்பண்ட பத்தி உனக்குத்தெரியும். அவர் சம்பளம் அவர் குடிக்கே பத்தாது. நானும் ஒண்ணும் ரொம்ப அதிகமா சம்பாதிக்கறது இல்ல. நைட் ஷிப்ட்னா அப்படித்தான். எல்லாத்துக்கும் அட்ஸட் பண்ணிட்டுத்தான் போகணும். என்ன ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ இல்ல. பாஸோட ஜொல்லுக்கு கொஞ்சம் அட்ஸட் பண்ணிட்டு போனோம்னா நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
" உங்க ஹஸ்பண்ட் இதைப்பத்தியெல்லாம் கேட்கமாட்டாரா?"
" அவர் என்ன, உன் கணவர் போலனு நினைச்சியா, பொண்டாட்டியே கதினு நினைச்சிட்டு இருக்க. பாரு, நீயும் ஒரு வருசமா அவரை அப்படி நோகடிக்கிற, மனுசன் உன்னையே சுத்தி சுத்தி வரான். அந்த மாதிரி கணவன் அமைய கொடுத்து வைக்கணும் ராதா. எனக்கு மட்டும் அப்படி அமைஞ்சிருந்தா, வாழ்க்கை முழுசுமா, அவர் காலடியிலேயே கிடப்பேன் தெரியுமா!. எனக்கு அமைஞ்சது இப்படி. அவருக்கு குடிக்க தினமும் காசு இருந்தா போதும். நான் எப்ப வரதப்பத்தியும் ஒரு கேள்வி கேட்க மாட்டார். ம்ம்ம், ஏன் என்னப்பத்தி பேசிட்டு, என் விதி அவ்வளவுதான், சரி வா, கோர்ட் வந்துடுச்சு"
ஏனோ, ராகவன் அவள் மனதில் வந்து வந்து போனான்.
சரியாக காலை 10 மணிக்கு ராதாவை கூப்பிட்டார்கள். ராகவனை நிமிர்ந்து பார்க்க கூடாது என்ற முடிவுடன் கோர்ட்டுக்கு சென்றாள். இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தார்கள்.
ஜட்ஜ் ஒரு பெண்மணி. ராதாவை பார்த்து கேட்டாள்:
" என்னம்மா, உன் முடிவுல இன்னும் உறுதியா இருக்கியா?"
பதில் சொல்ல நிமிர்ந்தவள் எதேச்சையாக ராகவனைப்பார்த்தாள்.
அருகிலிருந்த டீக்கடையிலிருந்து காற்றின் மூலம் மிக மெதுவாக அந்த பாட்டு அவர்கள் காதை வந்தடைந்தது.
"நிலாவே வா........"
கேள்விக்கு பதில் சொல்லவில்லையே இந்த பெண் என நினைத்து நிமிர்ந்து பார்த்த ஜட்ஜ் ஆச்சர்யமாக "அவர்களை' பார்த்தாள்.
ராதா, ராகவனின் மார்பில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
அவர்களை சேர்த்து வைத்த அதே பாட்டு, அவர்கள் பிரியக்கூடாது என்று நினைத்தோ என்னமோ, மீண்டும் அவர்களை சேர்ப்பதற்காக வந்து அவர்கள் காதில் தேனாகப்பாய்ந்து அவர்களை இணைத்ததை அறியாமல் சந்தோசம் கலந்த சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள் ஜட்ஜ்.
" அப்பா, அவரோட வாழப்பிடிக்கலை. எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்க"
எல்லோரும் அவள்மேல் இருக்கும் தப்பை எடுத்துக்கூறினர்கள். யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை. தன் முடிவிலேயே விடாப்பிடியாக இருந்தாள். நடுவில் பல முறை ராகவன் வந்தான். வீட்டில் உள்ள அனைவரிடமும் எடுத்துச்சொன்னான். ராதாவிடம் பேச முயன்றான். ஆனால், பேச மறுத்துவிட்டாள் அவள்.
பேசி பேசிப்பார்த்து வெறுத்துப்போன அவள் அப்பா, "விவாகரத்து என்ற முடிவில் நீ உறுதியாக இருந்தால், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ" என்று சொன்னவுடன், 'சரி' என்று வீட்டை விட்டு வந்தவள், கலாவின் வீட்டு மாடியில் குடி வந்து இதோ ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ராகவன் எத்தனையோ முறை முயன்றும் அவள் பேசவேயில்லை.
ராகவன் சந்தேகப்பட்டதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி என்னை சந்தேகப்படலாம் எனபதை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தாளே தவிர, வேறு எந்த விசயத்தையும் யோசிக்கவில்லை. கலாவும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, அந்த மேட்டரை பற்றி பேசுவதையே விட்டு விட்டாள்.
பழைய விசயங்களை அசைப்போட்டபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் உடனே கிளம்பத்தொடங்கினாள், இன்றுதான் குடும்ப நல கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். கலா வருகிறேன் எனச் சொல்லியிருந்தாள். கலா ஒரு கால் செண்டரில் வேலை பார்ப்பதால் வாரத்தில் மூன்று நாள் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் முடிந்து வந்து விட்டாளா? என்று பார்ப்பதற்காக மாடிப்படியில் எட்டிப்பார்த்தாள். அப்போதுதான் ஒரு கார் வந்து இறங்கியது. காரின் உள்ளேயிருந்து இறங்கினாள் கலா. அவள் இறங்கும்போது அவள் கூட வந்தவன் கலாவைப் பார்த்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துச்சென்றது ராதாவைத் தவிர யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன கண்றாவி இது?
ராதாவை பார்த்த கலா, " யேய் ஒரு அரை மணி நேரம் டைம் கொடு, குளிச்சிட்டு உடனே வரேன்" என்றவள், இவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினாள்.
அரை மணி நேரம் கழித்து இருவரும் ஆட்டோவில் கோர்ட்டுக்கு புறப்பட்டார்கள். ஆட்டோவில் போகும்போது ராதா கேட்டாள்,
"யாருடி அவன்?''
" யாரைச்சொல்லற, என்ன ட்ராப் பண்ணவறா?"
"ஆமாம்"
"எங்க பாஸ், ஏன் கேக்கற?"
"அவரைப்பார்த்தா நல்லவரா தெரியலையே?"
"இப்போ உனக்கு என்னத் தெரியணும், டைரக்டா கேளு"
" இல்ல அவர் உன் கூட வந்ததப்பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சதே?"
" ஆமா, நீ நினைக்கறது சரிதான்"
"அப்படீன்னா?"
" அவர் அப்படி, இப்படித்தான், கொஞ்சம் ஜொல்லு பார்ட்டி"
" நீ எப்படி இந்த மாதிரி ஆளோட?"
"ராதா, கொஞ்சம் ஓப்பனாவே சொல்லறேன். என் ஹஸ்பண்ட பத்தி உனக்குத்தெரியும். அவர் சம்பளம் அவர் குடிக்கே பத்தாது. நானும் ஒண்ணும் ரொம்ப அதிகமா சம்பாதிக்கறது இல்ல. நைட் ஷிப்ட்னா அப்படித்தான். எல்லாத்துக்கும் அட்ஸட் பண்ணிட்டுத்தான் போகணும். என்ன ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ இல்ல. பாஸோட ஜொல்லுக்கு கொஞ்சம் அட்ஸட் பண்ணிட்டு போனோம்னா நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
" உங்க ஹஸ்பண்ட் இதைப்பத்தியெல்லாம் கேட்கமாட்டாரா?"
" அவர் என்ன, உன் கணவர் போலனு நினைச்சியா, பொண்டாட்டியே கதினு நினைச்சிட்டு இருக்க. பாரு, நீயும் ஒரு வருசமா அவரை அப்படி நோகடிக்கிற, மனுசன் உன்னையே சுத்தி சுத்தி வரான். அந்த மாதிரி கணவன் அமைய கொடுத்து வைக்கணும் ராதா. எனக்கு மட்டும் அப்படி அமைஞ்சிருந்தா, வாழ்க்கை முழுசுமா, அவர் காலடியிலேயே கிடப்பேன் தெரியுமா!. எனக்கு அமைஞ்சது இப்படி. அவருக்கு குடிக்க தினமும் காசு இருந்தா போதும். நான் எப்ப வரதப்பத்தியும் ஒரு கேள்வி கேட்க மாட்டார். ம்ம்ம், ஏன் என்னப்பத்தி பேசிட்டு, என் விதி அவ்வளவுதான், சரி வா, கோர்ட் வந்துடுச்சு"
ஏனோ, ராகவன் அவள் மனதில் வந்து வந்து போனான்.
சரியாக காலை 10 மணிக்கு ராதாவை கூப்பிட்டார்கள். ராகவனை நிமிர்ந்து பார்க்க கூடாது என்ற முடிவுடன் கோர்ட்டுக்கு சென்றாள். இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தார்கள்.
ஜட்ஜ் ஒரு பெண்மணி. ராதாவை பார்த்து கேட்டாள்:
" என்னம்மா, உன் முடிவுல இன்னும் உறுதியா இருக்கியா?"
பதில் சொல்ல நிமிர்ந்தவள் எதேச்சையாக ராகவனைப்பார்த்தாள்.
அருகிலிருந்த டீக்கடையிலிருந்து காற்றின் மூலம் மிக மெதுவாக அந்த பாட்டு அவர்கள் காதை வந்தடைந்தது.
"நிலாவே வா........"
கேள்விக்கு பதில் சொல்லவில்லையே இந்த பெண் என நினைத்து நிமிர்ந்து பார்த்த ஜட்ஜ் ஆச்சர்யமாக "அவர்களை' பார்த்தாள்.
ராதா, ராகவனின் மார்பில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
அவர்களை சேர்த்து வைத்த அதே பாட்டு, அவர்கள் பிரியக்கூடாது என்று நினைத்தோ என்னமோ, மீண்டும் அவர்களை சேர்ப்பதற்காக வந்து அவர்கள் காதில் தேனாகப்பாய்ந்து அவர்களை இணைத்ததை அறியாமல் சந்தோசம் கலந்த சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள் ஜட்ஜ்.
5 comments:
முடிவு சுபம். எதிர்பார்த்ததுதான்... ஆனால் எப்படி சமாளிக்கப்போறீங்கன்னுதான் தெரியாம இருந்தேன். நல்லாவே முடிச்சி வச்சிட்டீங்க.
பெண் புத்தி பின் புத்தினு சொல்வாங்களே அதான் ஞாபகத்துக்கு வருது. இந்த மாதிரி அவசரப்பட்டு எடுக்குற முடிவுகள் சோகத்தில்தான் முடியும்.
---
அப்புறம்... லேபில்ல அனுபவம்னு போட்டுருக்கே! சொந்த அனுபவமா?
I am the regular visitor of your blog.This story is nice.First i thought that her friend was acting to realize about life as your previous stories.Your story and personal experiences touched my heart. - Jegan Mohan, Bangalore.
நன்றி எவனோ ஒருவன்.
ஐய்யோ, அனுபவம் எல்லாம் இல்ல. பழக்கத்துல அந்த லேபிள் வந்திடுச்சு.
ரொம்ப ரொம்ப நன்றி ஜெகன்.
உங்களின் பின்னூட்டம் எனக்கு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலை தருகிறது.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled '"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 4 (நிறைவு)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th July 2009 02:23:18 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/87803
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
Post a Comment