MD ராகவன் மேனஜரைப் பார்த்து கேட்டார், " அக்கவுண்டண்ட் வேலைக்கு முதல் சுற்று இன்டர்வியூ முடிஞ்சு, இறுதி கட்டத்துக்கு எத்தனை பேர் காத்துருக்காங்க?"
"சார், மொத்தம் 20 பேர் கலந்துகிட்ட இன்டர்வியூல CMD இரண்டு பேரை இறுதி கட்ட இன்டர்வியூக்கு தேர்ந்தெடுத்து உங்கள முடிவு பண்ணச்சொல்லியிருக்கார், ஏன்னா இரணடு பேர் குவாலிபிகேஷனும், மற்றும் அனைத்து தகுதிகளும் ஒரே அளவுல இருக்கு சார்"
"சரி, ஒவ்வொருத்தரா வரச் சொல்லுங்க"
முதலில் வந்தவன் அருண். பார்க்க ரொம்ப டீசண்டாக இருந்தான். நல்ல உடை. மிகுந்த நாகரிகம் உடையவனாக தெரிந்தான். பார்த்ததுமே ராகவனுக்கு அவனை ரொம்ப பிடித்து விட்டது. கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகச்சரியான பதில்களைச் சொன்னான் அருண். ஒரு கேள்விக்கும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. அவனுடைய ஆங்கில உச்சரிப்பு, அவனுடைய presence of mind அனைத்தும் ராகவனை கவர்ந்து விட்டது. கேட்ட சம்பளமும் அப்படி ஒன்றும் அதிகமில்லை. எல்லாம் முடிந்தவுடன் ராகவன், அருணைப் பார்த்து கேட்டார்,
" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"
" எஸ் சார். வருசம் எவ்வளவு போனஸ் தருவீங்க சார், ஆண்டுக்கு எத்தனை சதவீதம் சம்பள உயர்வு குடுப்பீங்க சார்?"
"அதெல்லாம் கமபனி ரூல்ஸ் பிரகாரம் கொடுப்போம்" என பதில் சொன்னவர், "சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?" என்று கேட்டார்.
" நாளைக்கே சேருவேன் சார்" என்றான் அருண்.
" ஓகே, நாங்க உங்களுக்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்கிறோம்" என்று அவனை அனுப்பி விட்டு, அடுத்த நபரை கூப்பிட்டு அனுப்பினார் ராகவன்.
" உள்ளே வரலாமா?" கேட்டப்படி நுழைந்தான் ரவி.
அவனை பார்த்த ராகவன் அதிர்ச்சியுற்றார். சாதாரண உடையில் இருந்த ரவி, ராகவன் கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுதான் சரியாக பதில் சொன்னான்.
"இவ்வளவு படித்திருக்கும் நீ ஏன் இன்னும் சரியான வேலையில் சேரவில்லை?" என்று கேட்டார் ராகவன்.
" சார், நான் படித்தது ஒரு கிராமத்து பள்ளியில் தமிழ் மீடியம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. இப்போது மெதுவாக கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னால், சரியாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாததால், எனக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை சார்"
ராகவன், ரவியைப் பார்த்து அருணை கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்,
" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"
"எஸ் சார், உங்க கம்பனியோட அடுத்த ப்ராஜக்ட் என்ன? டேர்ன் ஓவர் என்ன?"
பதில் சொல்லிவிட்டு அந்த கடைசி கேள்வியைக் கேட்டார்,
"சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?"
"சார், நான் இப்போ ஒரு ப்ராஜக்ட்ல இருக்கேன், அதனால ஒரு மூணு மாசம் டைம் வேணும் சார்"
இன்டர்வியூ முடிந்தவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ரவியைவிட அருண், பர்சனாலிட்டியில், அனுபவத்தில், ஆங்கில அறிவில் எல்லாவற்றிலுமே சிறந்தவனாக காணப்பட்டான்.
ராகவனிடம், மேனேஜர் கேட்டார், " என்ன சார், அருணுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணவா?"
" இல்லை, ரவிக்கு ரெடி பண்ணுங்க" என்றவரை ஆச்சரியமாக பார்த்த மேனேஜர்,
"அது எப்படி சார், அருண்தானே எல்லாவற்றிலும் சிறந்தவரா இருக்கார்"
" சார்.. அருணை நம்பி ஜாப் கொடுத்தீங்கன்னா, ஒரு 100 ரூபாய் அதிகமா ஒரு கம்பனி கொடுத்தா கூட உடனே ஓடிடுவார். ஏன்னா, எப்போ உன்னால ஜாயின் பண்ணமுடியும்னு கேட்டதுக்கு, நாளைக்கே ஜாயின் பண்ணறேனு சொல்லுறார், இப்போ இருக்க கம்பனி வேலைய பாதியில விட்டு வந்தா அந்த கம்பனி என்ன கஷ்டப்படும்னு நினைக்கல, அதுவுமில்லாம, போனஸ், சம்பளம் அதுலதான் அவரு பேச்சு முழுதும் இருந்துச்சு. ஆனா, ரவி ஆங்கில அறிவு இல்லங்கற உண்மையை ஒத்துகிட்டது, உடனே கம்பனில ஜாயின் பண்ணமுடியாது டைம் வேணும்னு கேட்டது, அடுத்து நம்ப கம்பனி ப்ராஜக்ட் பத்தி கேட்டது... இது மாதிரி சொல்லிட்டே போகலாம். ரவிக்கு வேலை கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்தா கம்பனிய நல்லா கவனிச்சுப்பார். அதனால கேட்ட சம்பளத்தவிட அதிகமா போட்டு ரவிக்கே அந்த ஆர்டர கொடுத்துடுங்க" என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மேனஜர்.
"சார், மொத்தம் 20 பேர் கலந்துகிட்ட இன்டர்வியூல CMD இரண்டு பேரை இறுதி கட்ட இன்டர்வியூக்கு தேர்ந்தெடுத்து உங்கள முடிவு பண்ணச்சொல்லியிருக்கார், ஏன்னா இரணடு பேர் குவாலிபிகேஷனும், மற்றும் அனைத்து தகுதிகளும் ஒரே அளவுல இருக்கு சார்"
"சரி, ஒவ்வொருத்தரா வரச் சொல்லுங்க"
முதலில் வந்தவன் அருண். பார்க்க ரொம்ப டீசண்டாக இருந்தான். நல்ல உடை. மிகுந்த நாகரிகம் உடையவனாக தெரிந்தான். பார்த்ததுமே ராகவனுக்கு அவனை ரொம்ப பிடித்து விட்டது. கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகச்சரியான பதில்களைச் சொன்னான் அருண். ஒரு கேள்விக்கும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. அவனுடைய ஆங்கில உச்சரிப்பு, அவனுடைய presence of mind அனைத்தும் ராகவனை கவர்ந்து விட்டது. கேட்ட சம்பளமும் அப்படி ஒன்றும் அதிகமில்லை. எல்லாம் முடிந்தவுடன் ராகவன், அருணைப் பார்த்து கேட்டார்,
" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"
" எஸ் சார். வருசம் எவ்வளவு போனஸ் தருவீங்க சார், ஆண்டுக்கு எத்தனை சதவீதம் சம்பள உயர்வு குடுப்பீங்க சார்?"
"அதெல்லாம் கமபனி ரூல்ஸ் பிரகாரம் கொடுப்போம்" என பதில் சொன்னவர், "சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?" என்று கேட்டார்.
" நாளைக்கே சேருவேன் சார்" என்றான் அருண்.
" ஓகே, நாங்க உங்களுக்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்கிறோம்" என்று அவனை அனுப்பி விட்டு, அடுத்த நபரை கூப்பிட்டு அனுப்பினார் ராகவன்.
" உள்ளே வரலாமா?" கேட்டப்படி நுழைந்தான் ரவி.
அவனை பார்த்த ராகவன் அதிர்ச்சியுற்றார். சாதாரண உடையில் இருந்த ரவி, ராகவன் கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுதான் சரியாக பதில் சொன்னான்.
"இவ்வளவு படித்திருக்கும் நீ ஏன் இன்னும் சரியான வேலையில் சேரவில்லை?" என்று கேட்டார் ராகவன்.
" சார், நான் படித்தது ஒரு கிராமத்து பள்ளியில் தமிழ் மீடியம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. இப்போது மெதுவாக கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னால், சரியாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாததால், எனக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை சார்"
ராகவன், ரவியைப் பார்த்து அருணை கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்,
" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"
"எஸ் சார், உங்க கம்பனியோட அடுத்த ப்ராஜக்ட் என்ன? டேர்ன் ஓவர் என்ன?"
பதில் சொல்லிவிட்டு அந்த கடைசி கேள்வியைக் கேட்டார்,
"சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?"
"சார், நான் இப்போ ஒரு ப்ராஜக்ட்ல இருக்கேன், அதனால ஒரு மூணு மாசம் டைம் வேணும் சார்"
இன்டர்வியூ முடிந்தவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ரவியைவிட அருண், பர்சனாலிட்டியில், அனுபவத்தில், ஆங்கில அறிவில் எல்லாவற்றிலுமே சிறந்தவனாக காணப்பட்டான்.
ராகவனிடம், மேனேஜர் கேட்டார், " என்ன சார், அருணுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணவா?"
" இல்லை, ரவிக்கு ரெடி பண்ணுங்க" என்றவரை ஆச்சரியமாக பார்த்த மேனேஜர்,
"அது எப்படி சார், அருண்தானே எல்லாவற்றிலும் சிறந்தவரா இருக்கார்"
" சார்.. அருணை நம்பி ஜாப் கொடுத்தீங்கன்னா, ஒரு 100 ரூபாய் அதிகமா ஒரு கம்பனி கொடுத்தா கூட உடனே ஓடிடுவார். ஏன்னா, எப்போ உன்னால ஜாயின் பண்ணமுடியும்னு கேட்டதுக்கு, நாளைக்கே ஜாயின் பண்ணறேனு சொல்லுறார், இப்போ இருக்க கம்பனி வேலைய பாதியில விட்டு வந்தா அந்த கம்பனி என்ன கஷ்டப்படும்னு நினைக்கல, அதுவுமில்லாம, போனஸ், சம்பளம் அதுலதான் அவரு பேச்சு முழுதும் இருந்துச்சு. ஆனா, ரவி ஆங்கில அறிவு இல்லங்கற உண்மையை ஒத்துகிட்டது, உடனே கம்பனில ஜாயின் பண்ணமுடியாது டைம் வேணும்னு கேட்டது, அடுத்து நம்ப கம்பனி ப்ராஜக்ட் பத்தி கேட்டது... இது மாதிரி சொல்லிட்டே போகலாம். ரவிக்கு வேலை கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்தா கம்பனிய நல்லா கவனிச்சுப்பார். அதனால கேட்ட சம்பளத்தவிட அதிகமா போட்டு ரவிக்கே அந்த ஆர்டர கொடுத்துடுங்க" என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மேனஜர்.
12 comments:
நல்ல சிறுகதை
நல்லாருக்கு தல..
நல்லாருக்கு தல..
Nalla flow..But Yella kadhai yilayum kadaisi round la rendu peru equal qualificationda...Pudhusa yedhavadhu yosingappa...Krish
சுபம் !
நன்றி சுரேஷ் குமார்
நன்றி டக்ளஸ்
மீண்டும் நன்றி டக்ளஸ்
நன்றி கிரிஷ்
நன்றி ராஜன்
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'இண்டர்வியூ - சிறுகதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th July 2009 12:35:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/89899
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
நல்லாயிருக்கு
என்னோட சாய்ஸ்ம் ரவிக்குதான்
நல்ல கதை.
தொழில் பக்தி பணத்தை விட முக்கியம்.
Sir,
nalla siru kadhai. Indha kadhaiyila ungaloda sondha experience-um kalandhu ulladhu.
-kArthik
நன்றி அபுஅப்ஸர்
நன்றி அக்பர்
நன்றி கார்த்திக்
நல்லாருக்கு அண்ணே.
Post a Comment