இந்த பாடல் உங்களுக்கு நினைவு உள்ளதா?
"பிரிந்தவர் மீண்டும் சேரும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி"
இந்த பாடல் காதலன்-காதலிக்காகவோ, இல்லை தலைவன் -தலைவிக்காகவோ எழுதப்பட்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை காதலன் காதலிக்காக எழுதப்பட்டு இருப்பதாக நினைக்க முடியவில்லை. ரொம்ப வருடங்கள் கழித்து காதலியை சந்திக்க நேர்ந்தால் அழுகை வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாறாக கோபமே வரும். ஏன்? அவர்களை அடுத்தவரின் மனைவியாக பார்க்கும் போது, நமக்கு என்ன அழுகையா வரும்.
இந்த வார ஆனந்த விகடனில் வந்த சிறுகதை படித்தீர்களா? அரவிந்தன் அவர்கள் எழுதிய "மார்கழிப்பூ" என்று நினைக்கிறேன். அது கதை அல்ல ஒரு கவிதை. பல நண்பர்களின் வாழ்க்கையில் நடந்தவையாக இருக்கலாம். அப்படி ஒரு கதை. படித்து சில நிமிடங்கள் என் வாழ்க்கையின் பின் பகுதிக்கு சென்று விட்டேன். சரி, இப்போ நான் சொல்ல வந்தது வேறு.
நான் என் கல்லூரி படிப்பை திருச்சி St. Joseph கல்லூரியில் முடித்தேன். எங்கள் கல்லூரியில் இரண்டு வகுப்புகள். A மற்றும் B. நான் B வகுப்பில் படித்தேன். இரண்டு வகுப்பிலும் சேர்த்து ஏறக்குறைய 120 மாணவர்கள். சந்தோசமான நாட்கள் அவை. என்னைச் சுற்றி எப்போதுமே நண்பர்கள் இருப்பார்கள். அது என் இயல்பு. சிறு வயதில் இருந்து இன்று வரை அது தொடர்கிறது.
பால்ய சிநேகிதர்கள் ஒரு வகை. என்னுடன் இன்னும் நெருக்கத்தில் இருக்கும் என் ஊர் நண்பர்கள் ஒரு வகை. அதன் பிறகு நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், குடியிருக்கும் தெருவில், என்று பல வகையான நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் விட என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் அனைவரும் இன்னும் என் மனதை விட்டு விலகாமல் இருக்கிறார்கள். காரணம் அப்போது இருந்த சந்தோசம், இன்று என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரி நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு குழும மெயில் ஐடி ஆரம்பித்தார்கள். நண்பர்கள் கொஞ்சம் கொஞசமாக சேர ஆரம்பித்தார்கள். அவ்வப்போது மெயில்கள் வரும். சிலரை நேரில் சந்தித்து இருக்கிறேன். சிலரை மெயிலில் மட்டுமே. இப்போது ஒவ்வொருவராக குழுமத்தில் சேர ஆரம்பிக்கிறார்கள்.
எங்கள் பேட்சிச்சின் xxxx வருட விழாவினை அடுத்த வருடம் கொண்டாட இருக்கிறோம். எத்தனையாவது வருடம் என்பது இங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். என் வயது உங்களுக்கு தெரிந்து என்ன ஆகப் போகிறது? .
ஒவ்வொருவரும் இருக்கும் இடத்தை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. மிகச்சிறந்தவர்களாக நண்பர்கள் இருப்பதில் எனக்கு சந்தோசம். எல்லா நண்பர்களின் முகமும் ஏறக்குறைய நினைவில் உள்ளது.
ஒரு நண்பரின் பெயர் சுபான். அவர் படித்தது A வகுப்பில் ஆனால் நான் படித்ததோ B வகுப்பில். அவர் நேற்று முன் தினம் குழுமத்தில் சேர்ந்தார். அவர் சேர்ந்ததுமே நான் ஒரு மெயிலில் அனுப்பினேன்,
"தினமும் காரில் வருவீர்களே? நீங்கள் தானே அவர்"
"ஆமாம்" என்று என் கேள்வியால் வியந்து போனார். விசயம் ஒன்றும் இல்லை. அந்த வயதில் கார் என்பது கனவில் மட்டுமே. ஏன் இன்னும் சொல்லப் போனால் கனவில் கூட கார் வராது. டிவிஎஸ் 50தான் வரும். இன்று 15 வருடமாக கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் அன்று கார் இல்லைதானே?
வெங்கடாஜலபதி என்று ஒரு நண்பன். பதி என அழைப்போம். அவன் ஒருநாள் போட்ட சட்டையை அடுத்த நாள் போட்டதாக நினைவு இல்லை. 60 நாளுக்கு ஒரு முறைதான் அந்த சட்டை வரும். அத்தனை விதாமான உடைகள் அணிவான். நான் இரண்டு பனியன் ஜட்டிகளுடன் வாரம் முழுக்க கழித்த நாட்கள் அவை. அவனை எப்போதும் ஒரு ஏக்கத்துடனேயே பார்ப்பேன்.
அனந்த நாரயணன் என்று ஒரு நண்பன். தினமும் சேர்ந்துதான் டிரெயினில் போவோம். தினமும் டிரெயினில் பாட்டு பாடிக்கொண்டே போவோம். தினமும் அவன் கொண்டு வரும் சப்பாத்தியையும் உருளைக்கிழங்கு வறுவலையும் வாங்கி சாப்பிடுவோம். சில நாட்கள் அவனுக்கு கோபம் வரும். "நான் சாப்பிட என்ன செயவது?" என்று கேட்பான். எத்தனையோ வருடங்கள் ஆன பின்னும் அவன் என் நினைவிலேயே இருந்தான். ஆனால் தொடர்பு இல்லை.
சம்பந்தம் இல்லாமல் அடிக்கடி கனவில் வருவான். என்றாவது ஒரு நாள் சந்திக்க மாட்டோமா? என ஏங்கியதுண்டு. ஏன் முதல் காதலியின் நினைவு மட்டும்தான் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன? இப்படி பல நண்பர்களையும் அந்தந்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து நினைத்துக்கொள்வேன்.
கல்லூரி போட்டோ எடுத்த தினத்தில் நானும், அவனும் "அந்தர்தாகம்' என்ற மலையாட பிட்டு படத்துக்கு போய் வந்து எண்ணைய் வழிய போட்டோவில் நின்றது நினைவுக்கு வருகிறது.
இப்படி என் நினைவுகளில் இருந்து கொண்டிருந்த அவன் நேற்று கோயம்புத்தூரில் இருந்து போன் செய்தான். ஒரு நிமிடம் சந்தோசத்தின் உச்சிக்கு போய் வந்தேன். 30 நிமிடம் பேசினான். ஒவ்வொரு நிகழ்ச்சியாக சொல்லி சொல்லி நினைவு படுத்தினான். நேற்று முழுவதும் அதே நினைவு. கண்கள் பனித்தது. இன்னும் அனைவரையும் சந்தித்தால் எப்படி இருக்கும்? பழைய நண்பர்களுடன் நீண்ட நாட்கள் கழித்து பேசும்போது ஏற்படும் சந்தோசத்தை எந்த ஒரு சந்தோசத்துடனும் ஒப்பிட முடியாது.
அடுத்த வருடத்தில் அனைவரும் எங்கள் கல்லூரியில் சந்திக்க இருக்கிறோம். கொஞ்சம் பயமாகவும் டென்ஷனாகவும் இருக்கிறது.
எப்படியாவது அந்த சந்திப்பின் போது நான் அழாமல் இருக்க வேண்டும்.
Sep 29, 2010
Sep 27, 2010
எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க!!!
சமீபகாலமா வேற வழியில்லாம நிறைய டிவி ஷோ பார்க்கறா மாதிரி ஒரு சூழ்நிலை. ஒரு நிகழ்ச்சியை சந்தோசமா பார்க்க விட மாட்டேங்கறாங்க. ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் தேவைதான். அதற்காக இப்படியா? எந்த ஷோ பார்த்தாலும், கீழே உள்ள வாக்கியங்களை நீங்க கண்டிப்பாக கேட்கலாம்;
"எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க"
"ஒரு ஓ போடுங்க"
வரவர இதைக் கேட்டா ஒரே எரிச்சலா இருக்கு. தாங்க முடியலை. ஒரு நிகழ்ச்சியை சுதந்திரமா பார்க்க முடியலை. சமீபத்துல எந்திரன் இசை வெளியீட்டு விழாவிலும், எந்திரன் டிரையிலர் வெளியீட்டு விழாவிலும் விவேக் பண்ண அலும்ப நீங்க பார்த்து இருப்பீங்க. கதை அப்படிங்கற பேருல அவர் என்னத்தையோ சொல்ல போக ஒருத்தர் கூட எந்த ரியாக்க்ஷனும் காண்பிக்கல. உடனே விவேக், 'இதுக்கு நீங்க கை தட்டலாம். ஒண்ணும் தப்பு இல்ல' ன்னு சொன்னத பார்த்தப்ப எனக்கு ஒரே சிரிப்புதான். எப்படி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம இப்படி பேச முடியுதோ தெரியலை.
சமீபத்துல மலேசியால 'நட்சத்திர கொண்டாட்டம்' ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல அப்படித்தான், ஆரம்பத்துல இருந்து கடைசி வரை, 'ஒரு தடவை கை தட்டுங்க', 'ஓ போடுங்கன்னு' ஒரே கெஞ்சல். அதுலயும், பாடகர் கிருஷ் ஒரு படி மேலே போய், "ஏன் விஐபி வரிசைல இருக்கும் யாரும் கை தட்ட மாட்டேங்கறீங்க. ஏன் கை தட்டுனா குறைஞ்சு போயிடுவீங்களானு" கேட்க ஆரம்பிச்சுட்டார்.
என் பக்கத்துல இருந்த ஒருத்தர் சொன்னது: "நிகழ்ச்சி பார்க்க டிக்கட்டையும் வாங்கிட்டு இவங்க சொல்லும் போது எல்லாம் கைத் தட்டிட்டே இருக்கணுமாம். என்ன கொடுமை சார் இது"
நிகழ்ச்சி முடிஞ்சு பார்த்தா, பாதி பேரை ஆஸ்பத்திரில சேர்த்துட்டாங்க. ஏன்னு தெரியுமா?
கை தட்டி தட்டி சில பேருக்கு கை எல்லாம் வீங்கி போயிடுச்சாம்.
சில பேர் கைகளை பிரிக்கவே முடியலையாம். கை தட்டி தட்டி கை ரெண்டும் ஒண்ணா ஒட்டிக்கிடுச்சாம்.
சில பேர் "ஓ" போட்டு "ஓ" போட்டு வாயை மூட முடியாம போயிடுச்சாம்.
அதனால் இனிமே இது மாதிரி நிகழ்ச்சிக்கு போனிங்கன்னா, ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்றதுக்காகத்தான் இதை எழுதுறேன்.
*******************************************
மெயிலில் வந்த ஒரு தகவல்:
Are we becoming less by the day ?
21st Century....
Our communication - Wireless
Our dress - Topless
Our telephone - Cordless
Our cooking - Fireless
Our youth - Jobless
Our food - Fatless
Our labour - Effortless
Our conduct - Worthless
Our relationship - Loveless
Our attitude - Careless
Our feelings - Heartless
Our politics - Shameless
Our education - Valueless
Our follies - Countless
Our arguments - Baseless
Our Job - Thankless
Our Boss - Brainless
Our Salary - Very less
Our emails - useless!!!
"எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க"
"ஒரு ஓ போடுங்க"
வரவர இதைக் கேட்டா ஒரே எரிச்சலா இருக்கு. தாங்க முடியலை. ஒரு நிகழ்ச்சியை சுதந்திரமா பார்க்க முடியலை. சமீபத்துல எந்திரன் இசை வெளியீட்டு விழாவிலும், எந்திரன் டிரையிலர் வெளியீட்டு விழாவிலும் விவேக் பண்ண அலும்ப நீங்க பார்த்து இருப்பீங்க. கதை அப்படிங்கற பேருல அவர் என்னத்தையோ சொல்ல போக ஒருத்தர் கூட எந்த ரியாக்க்ஷனும் காண்பிக்கல. உடனே விவேக், 'இதுக்கு நீங்க கை தட்டலாம். ஒண்ணும் தப்பு இல்ல' ன்னு சொன்னத பார்த்தப்ப எனக்கு ஒரே சிரிப்புதான். எப்படி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம இப்படி பேச முடியுதோ தெரியலை.
சமீபத்துல மலேசியால 'நட்சத்திர கொண்டாட்டம்' ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல அப்படித்தான், ஆரம்பத்துல இருந்து கடைசி வரை, 'ஒரு தடவை கை தட்டுங்க', 'ஓ போடுங்கன்னு' ஒரே கெஞ்சல். அதுலயும், பாடகர் கிருஷ் ஒரு படி மேலே போய், "ஏன் விஐபி வரிசைல இருக்கும் யாரும் கை தட்ட மாட்டேங்கறீங்க. ஏன் கை தட்டுனா குறைஞ்சு போயிடுவீங்களானு" கேட்க ஆரம்பிச்சுட்டார்.
என் பக்கத்துல இருந்த ஒருத்தர் சொன்னது: "நிகழ்ச்சி பார்க்க டிக்கட்டையும் வாங்கிட்டு இவங்க சொல்லும் போது எல்லாம் கைத் தட்டிட்டே இருக்கணுமாம். என்ன கொடுமை சார் இது"
நிகழ்ச்சி முடிஞ்சு பார்த்தா, பாதி பேரை ஆஸ்பத்திரில சேர்த்துட்டாங்க. ஏன்னு தெரியுமா?
கை தட்டி தட்டி சில பேருக்கு கை எல்லாம் வீங்கி போயிடுச்சாம்.
சில பேர் கைகளை பிரிக்கவே முடியலையாம். கை தட்டி தட்டி கை ரெண்டும் ஒண்ணா ஒட்டிக்கிடுச்சாம்.
சில பேர் "ஓ" போட்டு "ஓ" போட்டு வாயை மூட முடியாம போயிடுச்சாம்.
அதனால் இனிமே இது மாதிரி நிகழ்ச்சிக்கு போனிங்கன்னா, ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்றதுக்காகத்தான் இதை எழுதுறேன்.
*******************************************
மெயிலில் வந்த ஒரு தகவல்:
Are we becoming less by the day ?
21st Century....
Our communication - Wireless
Our dress - Topless
Our telephone - Cordless
Our cooking - Fireless
Our youth - Jobless
Our food - Fatless
Our labour - Effortless
Our conduct - Worthless
Our relationship - Loveless
Our attitude - Careless
Our feelings - Heartless
Our politics - Shameless
Our education - Valueless
Our follies - Countless
Our arguments - Baseless
Our Job - Thankless
Our Boss - Brainless
Our Salary - Very less
Our emails - useless!!!
Sep 15, 2010
200வது பதிவு - காலத்தினால் செய்த உதவி....
முதலில் இந்த 200வது பதிவில் கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்களுக்கு, திரட்டிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
01. என்னை பதிவுகள் எழுத தூண்டிய பரிசல்காரனின் எழுத்துக்களுக்கு.
02. இதுவரை என் எழுத்துக்களை பார்வையிட்டுச் சென்ற 93,284 பேர்களுக்கு.
03. என்னை பின் தொடரும் 97 நண்பர்களுக்கு.
04. இதுவரை என்னை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு.
05. என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படிக்க உதவிடும் தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10,மற்றும் திரட்டி நிர்வாகிகளுக்கு.
********************************************
இந்த முறை ஊரில் இருந்த போது ஒரு நண்பர் ஒரு இடம் விலைக்கு வருகிறது வாங்கிக்கொள்கின்றீர்களா? எனக் கேட்டார். சென்று பார்த்தேன். இடம் அருமையான இடம். என் வீட்டிற்கும், என் உறவினர்களின் வீடுகளுக்கு மிக அருகே ஒரு காலி இடம். இடத்தை பார்த்தவுடன் வாங்கலாம் என நினைத்து விலையை கேட்டேன். அவர் சொன்ன விலையை கேட்டு அதிர்ந்து போனேன். என்னை அழைத்து சென்றது என் நண்பரும், இரண்டு புரோக்கர்களும். அதிக விலை சொன்னதால் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அந்த இடத்தின் முதலாளி அவரின் பெண் குழந்தையின் மருத்துவ படிப்பின் டொனேஷனுக்காக விற்பதாக கூறினார். புரோக்கர்களும், படிப்பிற்கு உதவுமாறு என்னிடம் கெஞ்சினர். படிப்பிற்காக பல லட்சம் எப்படி அதிகமாக கொடுத்து வாங்க முடியும் என நினைத்து வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் என் வீட்டிற்கு வந்த இடத்தின் முதலாளி, "சார், நாம புரோக்கர் இல்லாம முடிச்சுக்கலாம். என்ன சொல்றிங்க?" எனக் கேட்டார்.
நான், "எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அந்த இடத்திற்காக நீங்கள் கேட்கும் விலை ரொம்ப அதிகம்" என்றேன்.
அவர் விடாப்பிடியாக அதிக விலை சொல்லவே, எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால், அவரோ, "உங்களுக்கு கொடுக்கவே விருப்பம்" என்று கூறிக்கொண்டே இருந்தார். நான் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் அவர் அடுத்து ஒரு நபரிடம் இடத்தை காண்பித்து பேசி முடிக்கும் தருவாயில், என்னை அழைத்து, "நான் அவருக்கு கொடுக்கவா, இல்லை நீங்கள் வாங்கி கொள்கின்றீர்களா?" எனக்கேட்டார்.
நான், "அவர் அதிகமாக பணம் கொடுக்கும் பட்சத்தில் அவரிடமே கொடுத்துவிடுங்கள்" என கூறிவிட்டேன். பின்பு இரண்டு நாள் சென்று எனக்கு போன் செய்தார் இப்படி,
"சார், வாங்க்கிக்கறீங்களா?"
"நீங்கதான் பேசி முடிச்சீங்களே?"
"உண்மைதான். ஆனால், உங்களுக்கு கொடுக்கவே எனக்கு விருப்பம்"
"அப்படியானால் நான் சொன்ன விலைக்கு கொடுங்கள்"
"இல்லை சார். இடம் நல்ல இடம். அவர் கொடுப்பதைவிட அதிகம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்"
"இது என்னங்க நியாயம். நான் ஏன் அதிகம் கொடுக்க வேண்டும். நீங்கள் அவருக்கு கொடுத்து விடுங்கள்"
"ப்ளீஸ் சார்"
நான் மறுத்துவிட்டேன். நான் ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு, என் நண்பன் அவரிடம் பேச, அவர் என்னை மீண்டும் என்னை வாங்கிக்கொள்ள சொல்லி இருக்கிறார். பின்புதான் விசயம் தெரிந்தது. அவருக்கு உடனடியாக பெரிய தொகை வேண்டும். ஆனால் அவரிடம் பேசி முடித்தவரிடம் பணம் அன்று இல்லை. பணம் உடனே கட்டாவிட்டால், மருத்துவ கல்லூரி அட்மிஷன் கிடைக்காது. என்னிடம் உடனே பணம் வாங்கிவிடலாம் என்பது அவரின் எண்ணம். நான் இன்ஜினியர் நண்பரிடம் கேட்டேன். அவரோ, "கொஞ்சம் நல்ல இடமா இருக்கு. விலை முன்னே பின்னே இருந்தாலும் வாங்கிவிடுங்கள்" என்றார்.
உடனே நண்பரின் மூலம் அவரை வரச்சொன்னேன். வீட்டிற்கு வந்தார். வாங்கிக்கொள்ள சொல்லி வற்புறுத்தினார். விலை அவர் பேசி வைத்திருந்ததை விட அதிகமாக கேட்டார். நியாயமாக, நான் செய்யும் உதவிக்கு அவர் எனக்கு குறைத்து தர வேண்டும். ஆனால் அதிகம் கேட்டார். அதோடு இல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய குடும்பத்தில் ஒருவர் மருத்துவர் ஆவது என்பது நடைபெறாத காரியம். அவர் அழ ஆரம்பிக்கவே, மிக அதிக விலை கொடுத்து, அவர் பெண்ணின் மருத்துவ படிப்பிற்கு உதவட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் வாங்க ஒப்புக்கொண்டேன். அவர் ஏற்கனவே பேசி வைத்தவரிடம் அட்வான்ஸ் வாங்கவில்லை. இருந்தாலும் நான் அவரிடம், "நீங்கள் அவரிடம் சென்று தெரிவியுங்கள். அதுதான் முறை. அவர் வேண்டாம் என சொன்னால் மட்டுமே நான் வாங்குவேன்" என சொல்லி அனுப்பிவிட்டேன்.
சென்றவர் மூன்று மணி நேரம் கழித்து வந்தார். ஏற்கனவே பேசி வைத்த நபர் அவரை திட்டி அனுப்பியதாகவும், அதனால் நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி மீண்டும் ஒரு முறை அழுதார். மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கேட்டார். அடுத்த நாள் தருவதாக கூறி அனுப்பிவைத்தேன். 4 மணிக்கு போன் செய்து, "அடுத்த நாள் கோகுலாஷ்டமி, பேங்க் விடுமுறை. இப்போதே பணம் வேண்டும்" என மீண்டும் அழுதார். உடனே பேங்கிற்கு ஓடி, மேனேஜரிடம் பேசி பணத்தை வாங்கி கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு சென்னை சென்று விட்டார்.
ரெஜிஸ்ட்ரேஷன் அன்று முதலில் இடத்தை காட்டிய புரோக்கர்கள் என் நண்பனிடம் சென்று பணம் கேட்டிருக்கிறார்கள். என் அனைத்து நண்பர்களும், புரோக்கர்கள் கூறியதால்தான் அந்த இடம் உனக்கு கிடைத்தது. அதனால் அவர்களுக்கு கமிஷன் கொடுப்பதுதான் முறை. அவர்களுக்கு வருமானமே இதுதான் என கூறவே, ஏற்கனவே அதிக விலை கொடுத்து வாங்கும் நான் புரோக்கர் கமிஷனையும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். இதோடு முடிந்திருந்தால், இந்த பதிவு எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருக்காது. ஆனால், அந்த லேண்ட் ஓனர், அவர் கொடுக்க வேண்டிய கமிஷனையும் என்னை கொடுக்க சொல்லவே பிர்ச்சனை ஆரம்பமானது.
வாங்குபவர் எப்படி விற்பவர் தரவேண்டிய கமிஷனையும் தர முடியும் என கேட்டதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், சரி, நானே அதையும் கொடுக்கலாம் என முடிவெடுத்து அதை புரோக்கர்களிடம் சொன்னால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்.
"நீங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டீர்கள். அவர் கமிஷனை அவர் தருவதுதான் முறை" என்று கூறிவிட்டார்கள். எனக்கு அடுத்த நாள் காலை மலேசியா வர வேண்டியதால் கிளம்ப ஆரம்பித்தேன்.
அப்போது என்னை பார்த்து அந்த லேண்ட் ஓனர் சொன்னவைகளை இங்கே கீழே தருகிறேன்:
"நல்லா இருங்க உலகநாதன். என்னை ஏமாத்திட்டீங்க. வம்பில மாட்டிவிட்டீங்க. சொத்து வாங்கிட்டீங்கள்ள. அதான் போறீங்க. ஒரு வாரம் லேட்டானாலும் அவர்கிட்டயே வித்து இருக்கலாம். ரொம்ப மனசு கஷ்டப்பட்டு சொல்றேன். நல்லா இருங்க"
நான் அன்று செய்த உதவியை மிகச்சுலபத்தில் மறந்து போனார். மிக அதிக விலை கொடுத்து, அவரின் பெண்ணின் படிப்பிற்கு உதவுவதற்காக வாங்கியதற்கு, என்னை பார்த்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அவை.
மலேசியாவில் விமானம் தரை இறங்கும் வரை மனம் நிம்மதி இல்லாமலே இருந்தது.
********************************
ஏற்போட்டிற்கு கிளம்பும்போது பெரிய அக்கா, நாங்கள் ஏற்போட்டில் சாப்பிடுவதற்காக நான்கு பொட்டலங்கள் இட்லி கொடுத்தார். நான் "இவ்வளவு வேண்டாம். எங்களால் சாப்பிட முடியாது. என்னால் வீணாக்கவும் முடியாது" என்று சொல்லி ஒரு பாக்கட்டை திருப்பி கொடுத்தேன்.
பின்பு ஏற்போட்டில் பார்க்கும் போது, அந்த நாலாவது பாக்கட்டும் சேர்ந்தே இருந்தது. எனக்கு கோபம். வீட்டிற்கு போன் செய்து சத்தம் போடலாம் என நினைத்து அக்காவிற்கு போன் போட்டேன். மனைவி தடுத்துவிட்டார். என் சுவாபம் அப்படி. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா பாக்கட்டை என் மனைவி அங்கே வேலை செய்யும் ஒரு வயதான் பெண்மணியிடம் கொடுத்தார். அவர் சந்தோசமாக வாங்கிகொண்டார். விமானத்தில் ஏற சொல்லி அறிவிப்பு வரும்போது, அந்த வயதான பெண்மணி ஓடி வந்து என் மனைவியின் கையை பிடித்துக்கொண்டு,
"சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சும்மா. வயிறார சாப்பிட்டேன். மகராசியா இரு"
ஏனோ அந்த லேண்ட் ஓனர் என் நினைவிற்கு வந்து போனார்.
01. என்னை பதிவுகள் எழுத தூண்டிய பரிசல்காரனின் எழுத்துக்களுக்கு.
02. இதுவரை என் எழுத்துக்களை பார்வையிட்டுச் சென்ற 93,284 பேர்களுக்கு.
03. என்னை பின் தொடரும் 97 நண்பர்களுக்கு.
04. இதுவரை என்னை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு.
05. என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படிக்க உதவிடும் தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10,மற்றும் திரட்டி நிர்வாகிகளுக்கு.
********************************************
இந்த முறை ஊரில் இருந்த போது ஒரு நண்பர் ஒரு இடம் விலைக்கு வருகிறது வாங்கிக்கொள்கின்றீர்களா? எனக் கேட்டார். சென்று பார்த்தேன். இடம் அருமையான இடம். என் வீட்டிற்கும், என் உறவினர்களின் வீடுகளுக்கு மிக அருகே ஒரு காலி இடம். இடத்தை பார்த்தவுடன் வாங்கலாம் என நினைத்து விலையை கேட்டேன். அவர் சொன்ன விலையை கேட்டு அதிர்ந்து போனேன். என்னை அழைத்து சென்றது என் நண்பரும், இரண்டு புரோக்கர்களும். அதிக விலை சொன்னதால் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அந்த இடத்தின் முதலாளி அவரின் பெண் குழந்தையின் மருத்துவ படிப்பின் டொனேஷனுக்காக விற்பதாக கூறினார். புரோக்கர்களும், படிப்பிற்கு உதவுமாறு என்னிடம் கெஞ்சினர். படிப்பிற்காக பல லட்சம் எப்படி அதிகமாக கொடுத்து வாங்க முடியும் என நினைத்து வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் என் வீட்டிற்கு வந்த இடத்தின் முதலாளி, "சார், நாம புரோக்கர் இல்லாம முடிச்சுக்கலாம். என்ன சொல்றிங்க?" எனக் கேட்டார்.
நான், "எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அந்த இடத்திற்காக நீங்கள் கேட்கும் விலை ரொம்ப அதிகம்" என்றேன்.
அவர் விடாப்பிடியாக அதிக விலை சொல்லவே, எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால், அவரோ, "உங்களுக்கு கொடுக்கவே விருப்பம்" என்று கூறிக்கொண்டே இருந்தார். நான் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் அவர் அடுத்து ஒரு நபரிடம் இடத்தை காண்பித்து பேசி முடிக்கும் தருவாயில், என்னை அழைத்து, "நான் அவருக்கு கொடுக்கவா, இல்லை நீங்கள் வாங்கி கொள்கின்றீர்களா?" எனக்கேட்டார்.
நான், "அவர் அதிகமாக பணம் கொடுக்கும் பட்சத்தில் அவரிடமே கொடுத்துவிடுங்கள்" என கூறிவிட்டேன். பின்பு இரண்டு நாள் சென்று எனக்கு போன் செய்தார் இப்படி,
"சார், வாங்க்கிக்கறீங்களா?"
"நீங்கதான் பேசி முடிச்சீங்களே?"
"உண்மைதான். ஆனால், உங்களுக்கு கொடுக்கவே எனக்கு விருப்பம்"
"அப்படியானால் நான் சொன்ன விலைக்கு கொடுங்கள்"
"இல்லை சார். இடம் நல்ல இடம். அவர் கொடுப்பதைவிட அதிகம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்"
"இது என்னங்க நியாயம். நான் ஏன் அதிகம் கொடுக்க வேண்டும். நீங்கள் அவருக்கு கொடுத்து விடுங்கள்"
"ப்ளீஸ் சார்"
நான் மறுத்துவிட்டேன். நான் ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு, என் நண்பன் அவரிடம் பேச, அவர் என்னை மீண்டும் என்னை வாங்கிக்கொள்ள சொல்லி இருக்கிறார். பின்புதான் விசயம் தெரிந்தது. அவருக்கு உடனடியாக பெரிய தொகை வேண்டும். ஆனால் அவரிடம் பேசி முடித்தவரிடம் பணம் அன்று இல்லை. பணம் உடனே கட்டாவிட்டால், மருத்துவ கல்லூரி அட்மிஷன் கிடைக்காது. என்னிடம் உடனே பணம் வாங்கிவிடலாம் என்பது அவரின் எண்ணம். நான் இன்ஜினியர் நண்பரிடம் கேட்டேன். அவரோ, "கொஞ்சம் நல்ல இடமா இருக்கு. விலை முன்னே பின்னே இருந்தாலும் வாங்கிவிடுங்கள்" என்றார்.
உடனே நண்பரின் மூலம் அவரை வரச்சொன்னேன். வீட்டிற்கு வந்தார். வாங்கிக்கொள்ள சொல்லி வற்புறுத்தினார். விலை அவர் பேசி வைத்திருந்ததை விட அதிகமாக கேட்டார். நியாயமாக, நான் செய்யும் உதவிக்கு அவர் எனக்கு குறைத்து தர வேண்டும். ஆனால் அதிகம் கேட்டார். அதோடு இல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய குடும்பத்தில் ஒருவர் மருத்துவர் ஆவது என்பது நடைபெறாத காரியம். அவர் அழ ஆரம்பிக்கவே, மிக அதிக விலை கொடுத்து, அவர் பெண்ணின் மருத்துவ படிப்பிற்கு உதவட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் வாங்க ஒப்புக்கொண்டேன். அவர் ஏற்கனவே பேசி வைத்தவரிடம் அட்வான்ஸ் வாங்கவில்லை. இருந்தாலும் நான் அவரிடம், "நீங்கள் அவரிடம் சென்று தெரிவியுங்கள். அதுதான் முறை. அவர் வேண்டாம் என சொன்னால் மட்டுமே நான் வாங்குவேன்" என சொல்லி அனுப்பிவிட்டேன்.
சென்றவர் மூன்று மணி நேரம் கழித்து வந்தார். ஏற்கனவே பேசி வைத்த நபர் அவரை திட்டி அனுப்பியதாகவும், அதனால் நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி மீண்டும் ஒரு முறை அழுதார். மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கேட்டார். அடுத்த நாள் தருவதாக கூறி அனுப்பிவைத்தேன். 4 மணிக்கு போன் செய்து, "அடுத்த நாள் கோகுலாஷ்டமி, பேங்க் விடுமுறை. இப்போதே பணம் வேண்டும்" என மீண்டும் அழுதார். உடனே பேங்கிற்கு ஓடி, மேனேஜரிடம் பேசி பணத்தை வாங்கி கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு சென்னை சென்று விட்டார்.
ரெஜிஸ்ட்ரேஷன் அன்று முதலில் இடத்தை காட்டிய புரோக்கர்கள் என் நண்பனிடம் சென்று பணம் கேட்டிருக்கிறார்கள். என் அனைத்து நண்பர்களும், புரோக்கர்கள் கூறியதால்தான் அந்த இடம் உனக்கு கிடைத்தது. அதனால் அவர்களுக்கு கமிஷன் கொடுப்பதுதான் முறை. அவர்களுக்கு வருமானமே இதுதான் என கூறவே, ஏற்கனவே அதிக விலை கொடுத்து வாங்கும் நான் புரோக்கர் கமிஷனையும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். இதோடு முடிந்திருந்தால், இந்த பதிவு எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருக்காது. ஆனால், அந்த லேண்ட் ஓனர், அவர் கொடுக்க வேண்டிய கமிஷனையும் என்னை கொடுக்க சொல்லவே பிர்ச்சனை ஆரம்பமானது.
வாங்குபவர் எப்படி விற்பவர் தரவேண்டிய கமிஷனையும் தர முடியும் என கேட்டதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், சரி, நானே அதையும் கொடுக்கலாம் என முடிவெடுத்து அதை புரோக்கர்களிடம் சொன்னால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்.
"நீங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டீர்கள். அவர் கமிஷனை அவர் தருவதுதான் முறை" என்று கூறிவிட்டார்கள். எனக்கு அடுத்த நாள் காலை மலேசியா வர வேண்டியதால் கிளம்ப ஆரம்பித்தேன்.
அப்போது என்னை பார்த்து அந்த லேண்ட் ஓனர் சொன்னவைகளை இங்கே கீழே தருகிறேன்:
"நல்லா இருங்க உலகநாதன். என்னை ஏமாத்திட்டீங்க. வம்பில மாட்டிவிட்டீங்க. சொத்து வாங்கிட்டீங்கள்ள. அதான் போறீங்க. ஒரு வாரம் லேட்டானாலும் அவர்கிட்டயே வித்து இருக்கலாம். ரொம்ப மனசு கஷ்டப்பட்டு சொல்றேன். நல்லா இருங்க"
நான் அன்று செய்த உதவியை மிகச்சுலபத்தில் மறந்து போனார். மிக அதிக விலை கொடுத்து, அவரின் பெண்ணின் படிப்பிற்கு உதவுவதற்காக வாங்கியதற்கு, என்னை பார்த்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அவை.
மலேசியாவில் விமானம் தரை இறங்கும் வரை மனம் நிம்மதி இல்லாமலே இருந்தது.
********************************
ஏற்போட்டிற்கு கிளம்பும்போது பெரிய அக்கா, நாங்கள் ஏற்போட்டில் சாப்பிடுவதற்காக நான்கு பொட்டலங்கள் இட்லி கொடுத்தார். நான் "இவ்வளவு வேண்டாம். எங்களால் சாப்பிட முடியாது. என்னால் வீணாக்கவும் முடியாது" என்று சொல்லி ஒரு பாக்கட்டை திருப்பி கொடுத்தேன்.
பின்பு ஏற்போட்டில் பார்க்கும் போது, அந்த நாலாவது பாக்கட்டும் சேர்ந்தே இருந்தது. எனக்கு கோபம். வீட்டிற்கு போன் செய்து சத்தம் போடலாம் என நினைத்து அக்காவிற்கு போன் போட்டேன். மனைவி தடுத்துவிட்டார். என் சுவாபம் அப்படி. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா பாக்கட்டை என் மனைவி அங்கே வேலை செய்யும் ஒரு வயதான் பெண்மணியிடம் கொடுத்தார். அவர் சந்தோசமாக வாங்கிகொண்டார். விமானத்தில் ஏற சொல்லி அறிவிப்பு வரும்போது, அந்த வயதான பெண்மணி ஓடி வந்து என் மனைவியின் கையை பிடித்துக்கொண்டு,
"சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சும்மா. வயிறார சாப்பிட்டேன். மகராசியா இரு"
ஏனோ அந்த லேண்ட் ஓனர் என் நினைவிற்கு வந்து போனார்.
Sep 13, 2010
முடிவு எப்படியும் இருக்கலாம்!
என் உறவினர் ஒருவர் நன்றாக இருந்தார். எந்தவிதமான நோயும் இல்லை. அவருக்கு மண வாழ்க்கை அப்படி ஒன்றும் சரியாக அமையவில்லை. இருந்த ஒரே பையனும் கல்லூரி படிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான். கணவனுக்கும், மனைவிக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. மிகுந்த சாமி பக்தி உடையவர். அவர் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் சந்தோசமாக இருந்ததாக நினைவில்லை. ஒரு நாள் மாலை எல்லோருக்கும் வழக்கம் போல காபி போட்டுக்கொடுத்து விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து டாக்டரிடம் செல்வதாக அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்றார். எல்லோரும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் டாக்டர் வீட்டிலிருந்து போன் செய்து, "உடனே யாராவது வாருங்கள்" என கேட்டுக்கொண்டார். உடனே இன்னொரு உறவினர் அங்கே சென்றார். அவர் போனதும்தான் தெரிந்தது, அவருக்கு வந்தது கடுமையான ஹார்ட் அட்டாக் என்றும், அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதும். பிறகு அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்க விரைந்த போது, போகும் வழியிலேயே இறந்து விட்டார். ஒரு வலி இல்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாமல் இறைவனடி சேர்ந்து விட்டார்.
வாழ்க்கையில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத அவர், சாவில் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் இறைவனை அடைந்தார். எவ்வளவு பெரிய கொடுப்பினை அது!
**************************************************
என் நண்பர் ஒருவரின் உறவினருக்கு 85 வயது ஆகியும் உயிருடன் இருந்தார். திடீரேன அவர் உடல் நிலை மோசமானது. அவரின் தொல்லைகளும் அதிகமானது. எல்லா உறவினர்களையும், பிள்ளைகளையும் வரச் சொன்னார். அனைவரும் வந்தார்கள். ஆனால், இவருக்கு உடல் நிலை சரியாகிவிட்டது. அனைவரும் திரும்ப அவரவர் வீட்டிற்கு செல்லும்படி ஆகிவிட்டது. ஆனால் அவரின் தொல்லைகள் அதிகமானது. வயது அதிகம் ஆகிவிட்டதால் அவரின் சேஷ்டைகள் சிறு குழந்தையின் செய்கை போல் ஆனது. மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். சாதாரணமாக உயிர் பிரியவில்லை. ஒரு கட்டத்தில் 'அப்பா எப்போ சாவார்?' என மகன்களும், மகள்களும் நினைக்கும் சூழல் உருவானது. கடைசியில் ஒரு நாள் இறந்து போனார்.
**************************************************
போன வருடம் டிசம்பர் மாதம் சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் முரளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் திருச்சி செல்ல கிங் பிஷ்சர் விமானத்திற்கு காத்திருக்கும் போது, அவர் வேறு ஒரு விமானத்திற்காக காத்திருந்தார். அவரை பிள்ளைகளிடம் காண்பித்து அவரை பற்றி சொன்னேன். அவரின் இளமையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவர் அப்படியே பிரிட்ஜிலிருந்து வந்தது போல் அவ்வளவு பிரஷ்சாக இருந்தார். அவரின் முகத்தில் எப்போதும் போல் அந்த சிரிப்பு. பல வருடங்களுக்கு முன் (15 வருடங்களுக்கு முன் இருக்கலாம்), சன் டிவியில் அவருடைய பேட்டி பார்த்தேன். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் பேட்டி எடுத்த பெண்மணி, " எப்படி சார் எப்பவுமே இளமையா இருக்கீங்க?'' அதற்கு அவரின் பதில்,
"நான் எப்போதுமே என் மனதை சந்தோசமாக வைத்திருப்பதுதான்"
அப்படிப்பட்ட முரளி மரணம் அடைந்த்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவருடைய பெண்ணுக்கு நிச்சயம் நடந்து சில நாட்கள் ஆகி இருக்கிறது. மகன் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சிவக்குமார் சொன்னது போல, "ஆண்டவன் மேல்தான் கோபம் வருகிறது"
யாருக்கும் எந்த தொந்தரவும் வைக்காமல் தூங்கும்போதே இறந்திருக்கிறார். நல்ல சாவாம்! யாருக்கும் இப்படி அமையாதாம்! அதற்காக 46 வயதிலா? அவருக்கும் வேண்டுமானால் நல்ல சாவாக, வலியில்லா மரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் குடும்பத்திற்கு????
இப்போதெல்லாம் இரவில் தூங்கும் முன்னே முரளியின் நினைவு வருகிறது. தூங்கும் முன்னே ஒரு முறை மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகத்தையும் அமைதியாக பார்த்துக்கொள்கிறேன்.
காலையில் எழுந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் தூங்க ஆரம்பிக்கிறேன்.
**************************************************
இந்த முறை லால்குடியில் இருந்த ஒரு நாளின் மாலை வேளையில் கடுமையான மழை. ஒரே இடி, மின்னல். ரொம்ப நேரம் மழை அடித்து கொட்டியது. எப்போதும் போல் ஒரு மழை நாள் என நினைத்தேன். பிறகுதான் அந்த செய்தி வந்தது.
என்னுடன் டிரெயினில் தினமும் வந்த நண்பன் ஒருவன். எனக்கு அவனை நன்றாக தெரியும், ஆனால் அவ்வளவு பழக்கம் இல்லை. என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு நெருங்கிய பழக்கம். அவன் அதிகம் படிக்கவில்லை. விவசாயம்தான்.
அந்த மழைநாளில் அவனும், அவனுடைய நண்பன் ஒருவனும் வீட்டின் பின்புறம் தென்னை மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கடுமையான இடி, மின்னல். கடுமையான இடியின்போது ஏதோ வெளிச்சம் வரவே என் நண்பனின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நண்பன் கண்களை இருக்க மூடிக் கொண்டு இருந்திருக்கிறான். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால், என் நண்பன் ஒரு பத்தடி தள்ளி தலை குப்புற விழுந்து கிடந்திருக்கிறான். போய் தொட்டு தூக்கியபோதுதான் தெரிந்திருக்கிறது, அவன் இறந்துவிட்டான் என்று. அவனை சோதித்து பார்த்தபோது அவன் நெஞ்சு அருகே கருகி இருந்தது கண்டு பிடித்துள்ளார்கள்.
பக்கத்தில் இருந்தவன் இறக்கவில்லை. இவன் மட்டும் இறந்துவிட்டான். காரணம், அவன் பையில் செல்போன் இருந்திருக்கிறது.
விதி! என்ன செய்ய? அவன் குடும்பம் இப்போது மிகுந்த சோகத்தில்.
முடிவு எப்படியும் இருக்கலாம்!
சிறிது நேரத்தில் டாக்டர் வீட்டிலிருந்து போன் செய்து, "உடனே யாராவது வாருங்கள்" என கேட்டுக்கொண்டார். உடனே இன்னொரு உறவினர் அங்கே சென்றார். அவர் போனதும்தான் தெரிந்தது, அவருக்கு வந்தது கடுமையான ஹார்ட் அட்டாக் என்றும், அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதும். பிறகு அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்க விரைந்த போது, போகும் வழியிலேயே இறந்து விட்டார். ஒரு வலி இல்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாமல் இறைவனடி சேர்ந்து விட்டார்.
வாழ்க்கையில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத அவர், சாவில் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் இறைவனை அடைந்தார். எவ்வளவு பெரிய கொடுப்பினை அது!
**************************************************
என் நண்பர் ஒருவரின் உறவினருக்கு 85 வயது ஆகியும் உயிருடன் இருந்தார். திடீரேன அவர் உடல் நிலை மோசமானது. அவரின் தொல்லைகளும் அதிகமானது. எல்லா உறவினர்களையும், பிள்ளைகளையும் வரச் சொன்னார். அனைவரும் வந்தார்கள். ஆனால், இவருக்கு உடல் நிலை சரியாகிவிட்டது. அனைவரும் திரும்ப அவரவர் வீட்டிற்கு செல்லும்படி ஆகிவிட்டது. ஆனால் அவரின் தொல்லைகள் அதிகமானது. வயது அதிகம் ஆகிவிட்டதால் அவரின் சேஷ்டைகள் சிறு குழந்தையின் செய்கை போல் ஆனது. மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். சாதாரணமாக உயிர் பிரியவில்லை. ஒரு கட்டத்தில் 'அப்பா எப்போ சாவார்?' என மகன்களும், மகள்களும் நினைக்கும் சூழல் உருவானது. கடைசியில் ஒரு நாள் இறந்து போனார்.
**************************************************
போன வருடம் டிசம்பர் மாதம் சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் முரளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் திருச்சி செல்ல கிங் பிஷ்சர் விமானத்திற்கு காத்திருக்கும் போது, அவர் வேறு ஒரு விமானத்திற்காக காத்திருந்தார். அவரை பிள்ளைகளிடம் காண்பித்து அவரை பற்றி சொன்னேன். அவரின் இளமையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவர் அப்படியே பிரிட்ஜிலிருந்து வந்தது போல் அவ்வளவு பிரஷ்சாக இருந்தார். அவரின் முகத்தில் எப்போதும் போல் அந்த சிரிப்பு. பல வருடங்களுக்கு முன் (15 வருடங்களுக்கு முன் இருக்கலாம்), சன் டிவியில் அவருடைய பேட்டி பார்த்தேன். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் பேட்டி எடுத்த பெண்மணி, " எப்படி சார் எப்பவுமே இளமையா இருக்கீங்க?'' அதற்கு அவரின் பதில்,
"நான் எப்போதுமே என் மனதை சந்தோசமாக வைத்திருப்பதுதான்"
அப்படிப்பட்ட முரளி மரணம் அடைந்த்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவருடைய பெண்ணுக்கு நிச்சயம் நடந்து சில நாட்கள் ஆகி இருக்கிறது. மகன் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சிவக்குமார் சொன்னது போல, "ஆண்டவன் மேல்தான் கோபம் வருகிறது"
யாருக்கும் எந்த தொந்தரவும் வைக்காமல் தூங்கும்போதே இறந்திருக்கிறார். நல்ல சாவாம்! யாருக்கும் இப்படி அமையாதாம்! அதற்காக 46 வயதிலா? அவருக்கும் வேண்டுமானால் நல்ல சாவாக, வலியில்லா மரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் குடும்பத்திற்கு????
இப்போதெல்லாம் இரவில் தூங்கும் முன்னே முரளியின் நினைவு வருகிறது. தூங்கும் முன்னே ஒரு முறை மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகத்தையும் அமைதியாக பார்த்துக்கொள்கிறேன்.
காலையில் எழுந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் தூங்க ஆரம்பிக்கிறேன்.
**************************************************
இந்த முறை லால்குடியில் இருந்த ஒரு நாளின் மாலை வேளையில் கடுமையான மழை. ஒரே இடி, மின்னல். ரொம்ப நேரம் மழை அடித்து கொட்டியது. எப்போதும் போல் ஒரு மழை நாள் என நினைத்தேன். பிறகுதான் அந்த செய்தி வந்தது.
என்னுடன் டிரெயினில் தினமும் வந்த நண்பன் ஒருவன். எனக்கு அவனை நன்றாக தெரியும், ஆனால் அவ்வளவு பழக்கம் இல்லை. என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு நெருங்கிய பழக்கம். அவன் அதிகம் படிக்கவில்லை. விவசாயம்தான்.
அந்த மழைநாளில் அவனும், அவனுடைய நண்பன் ஒருவனும் வீட்டின் பின்புறம் தென்னை மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கடுமையான இடி, மின்னல். கடுமையான இடியின்போது ஏதோ வெளிச்சம் வரவே என் நண்பனின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நண்பன் கண்களை இருக்க மூடிக் கொண்டு இருந்திருக்கிறான். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால், என் நண்பன் ஒரு பத்தடி தள்ளி தலை குப்புற விழுந்து கிடந்திருக்கிறான். போய் தொட்டு தூக்கியபோதுதான் தெரிந்திருக்கிறது, அவன் இறந்துவிட்டான் என்று. அவனை சோதித்து பார்த்தபோது அவன் நெஞ்சு அருகே கருகி இருந்தது கண்டு பிடித்துள்ளார்கள்.
பக்கத்தில் இருந்தவன் இறக்கவில்லை. இவன் மட்டும் இறந்துவிட்டான். காரணம், அவன் பையில் செல்போன் இருந்திருக்கிறது.
விதி! என்ன செய்ய? அவன் குடும்பம் இப்போது மிகுந்த சோகத்தில்.
முடிவு எப்படியும் இருக்கலாம்!
Sep 7, 2010
ஊருக்கு உபதேசம்!
என் ஒவ்வொரு பயணங்களின் போதும், குறிப்பாக என் இந்திய பயணங்களின்போது நிறைய வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன். ஒவ்வொருவரிடமும் விதவிதமான வித்தியாசமான அனுபவங்களை பெறுகிறேன். நிறைய வாழ்க்கை பாடங்களை நான் அவர்கள் மூலம் கற்றுக்கொள்கிறேன். சில நல்லவைகளும், பல கெட்டவைகளும் அதில் அடக்கம். அதில் சில சுவாரசியமான அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
என் நண்பனின் தம்பி ஒருவன். அகராதியாக பேசுபவன். வாய் கொஞ்சம் அதிகம். அதனால், நான் அவனிடம் அதிகம் பேசுவதில்லை. அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். சாதாரண, மிக சாதாரண வேலைதான். ஆனால், அந்த கம்பனியின் சேர்மன் போல பேசுவான். அதை கேட்கவும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். அது எல்லாம் அதிகம் படிக்காதவர்கள் கூட்டம். எப்பொதுமே தன்னை ஒரு ஹீரோ போல நினைத்து அடுத்தவர்களிடம் பேசுவதே அவன் வேலை. அது அவனின் குணம். அதனால் எனக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. இருந்தாலும் சமீபத்தில் அவனோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுவதற்காக அவனைப்பற்றி சிறிது சொல்லும்படி ஆகிவிட்டது.
இந்த முறை என் இந்திய பயணத்தின்போது அவனை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானேன். நான் தினமும் சந்திக்கும் என் நண்பனின் கடைக்கு அவன் வருவதால், வேறு வழி இல்லாமல் அவனை சந்திக்க நேர்ந்தது. இனி, அவனுக்கும், எனக்கும் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்:
"உலக்ஸ், என்னோட ஒரு பக்கக் கதை ஒன்னு குமுதத்தில வந்தது தெரியுமா?"
"அப்படியா! குட்"
"ரேடியோ FMல கூட பேசினேன்"
"வெரி குட்"
"என்னை தினமும் 'இன்று ஒரு தகவல்' பகுதில பேச சொல்றாங்க. தென்கச்சி சாமிநாதன் இல்லாததுனால என்னை பேச சொல்றாங்க''
"அப்படியா? நல்ல விசயமாச்சே. பேச வேண்டியதுதானே?"
"பணம் ஒன்னும் கொடுப்பதில்லை. ப்ரீயா பேச முடியாதுல்ல"
"ம்ம்ம்ம்"
அப்போது ஒரு கல்லூரி மாணவன் வரவே, பேச்சு அவன் பக்கம் திரும்பியது. அவன் போனவுடன், திரும்பவும் உரையாடல் தொடர்ந்தது.
"இப்போ வந்துட்டு போனல்ல உலக்ஸ். அவன் கிட்ட என் MBA எக்ஸாமுக்காக மேத்ஸ்ல ஒரு டவுட் கேட்டேன். அவன் 'இது கஷ்டம். உங்களுக்கு புரியாது'ன்னு சொன்னான்.
'அப்புறம்?"
"அவன் கிட்ட புத்தகம் வாங்கி நானே படிச்சு தெரிஞ்சுட்டு அடுத்த நாள் பரிட்சைல 80 மார்க் வாங்கினேன் (அந்த மாணவன் வயது 20. இவன் வயது 35. 20 வயதுல 80 மார்க் வாங்கி இருந்தா ஒத்துக்கலாம். 35 வயசுல?)
"ம்ம்ம்ம்"
"மொத்தம் 25 கதைகள் எழுதி வைச்சிருக்கேன். குறும்படம் தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடிட்டு இருக்கேன்"
"நல்ல விசயம்தான்"
"சினிமா ஸ்டோரி டிஸ்கஷனுக்கு என்ன கூப்பிடுறாங்க. நான் தான் போகாம இருக்கேன்"
"அப்படியா?"
"நான் இண்டர்நெட்ல ரொம்ப பேமஸ் தெரியுமா?"
"அப்படியா?"
"என் பெயரை கூகிளில் போட்டா, நிறைய பக்கங்கள் வரும். வந்து குவியும். பார்த்திருக்கியா?" (பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்னும் குவியலை)
"நான் கூட பிளாக்ல எழுதுறேன் தெரியுமா? படிச்சிருக்கியா" என்றேன்.
"நான் பிளாக் எல்லாம் படிக்கறது இல்லை. அது என்ன சொந்த டைரி மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் குப்பை"
என் கோபம் தலைக்கு மேலே ஏற என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். தலை எழுத்தே என கேட்டுக்கொண்டிருந்தேன்.
"இன்னொரு விசயம் உலக்ஸ். நான் இரண்டு புத்தகம் எழுதி இருக்கேன்"
"அப்படியா! சந்தோசம்"
"இதுவரை இரண்டு பதிப்புகள் வந்துடுச்சு"
"ம்ம்ம்"
"ஒரு கல்லூரி நிறுவனம் மொத்தம் 200 புத்தகம் வாங்கினாங்க"
"அப்படியா? அப்படி என்ன எழுதின, அந்த புத்தகத்துல?"
"ஆபிஸ்ல எப்படி நல்ல பெயர் எடுக்கறது. எப்படி வேலை செய்தால் விரைவில் புரோமோசன் கிடைக்கும். எப்படி மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பது? என்பதை எல்லாம் அந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்கேன்"
"சரி. உன் அலுவலக வேலை எப்படி உள்ளது? ஏதேனும் புரோமோசன் கிடைச்சுதா?"
"இல்லை. நான் வேலையை விட்டு நின்னுட்டேன்"
"ஏன்? என்னாச்சு?"
"எனக்கும், எங்க பாஸுக்கும் ஒத்து வரலை. அதனால போடானு ரிஸைன் பண்ணீட்டேன்"
"இப்போ என்ன பண்ணற?"
"வேலை தேடிட்டு இருக்கேன்"
"நீ எழுதுன புத்தகத்தை முதல்ல நீ ஒழுங்கா படி" என சொல்ல நினைத்து சொல்லாமல் வந்துவிட்டேன்.
என் நண்பனின் தம்பி ஒருவன். அகராதியாக பேசுபவன். வாய் கொஞ்சம் அதிகம். அதனால், நான் அவனிடம் அதிகம் பேசுவதில்லை. அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். சாதாரண, மிக சாதாரண வேலைதான். ஆனால், அந்த கம்பனியின் சேர்மன் போல பேசுவான். அதை கேட்கவும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். அது எல்லாம் அதிகம் படிக்காதவர்கள் கூட்டம். எப்பொதுமே தன்னை ஒரு ஹீரோ போல நினைத்து அடுத்தவர்களிடம் பேசுவதே அவன் வேலை. அது அவனின் குணம். அதனால் எனக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. இருந்தாலும் சமீபத்தில் அவனோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுவதற்காக அவனைப்பற்றி சிறிது சொல்லும்படி ஆகிவிட்டது.
இந்த முறை என் இந்திய பயணத்தின்போது அவனை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானேன். நான் தினமும் சந்திக்கும் என் நண்பனின் கடைக்கு அவன் வருவதால், வேறு வழி இல்லாமல் அவனை சந்திக்க நேர்ந்தது. இனி, அவனுக்கும், எனக்கும் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்:
"உலக்ஸ், என்னோட ஒரு பக்கக் கதை ஒன்னு குமுதத்தில வந்தது தெரியுமா?"
"அப்படியா! குட்"
"ரேடியோ FMல கூட பேசினேன்"
"வெரி குட்"
"என்னை தினமும் 'இன்று ஒரு தகவல்' பகுதில பேச சொல்றாங்க. தென்கச்சி சாமிநாதன் இல்லாததுனால என்னை பேச சொல்றாங்க''
"அப்படியா? நல்ல விசயமாச்சே. பேச வேண்டியதுதானே?"
"பணம் ஒன்னும் கொடுப்பதில்லை. ப்ரீயா பேச முடியாதுல்ல"
"ம்ம்ம்ம்"
அப்போது ஒரு கல்லூரி மாணவன் வரவே, பேச்சு அவன் பக்கம் திரும்பியது. அவன் போனவுடன், திரும்பவும் உரையாடல் தொடர்ந்தது.
"இப்போ வந்துட்டு போனல்ல உலக்ஸ். அவன் கிட்ட என் MBA எக்ஸாமுக்காக மேத்ஸ்ல ஒரு டவுட் கேட்டேன். அவன் 'இது கஷ்டம். உங்களுக்கு புரியாது'ன்னு சொன்னான்.
'அப்புறம்?"
"அவன் கிட்ட புத்தகம் வாங்கி நானே படிச்சு தெரிஞ்சுட்டு அடுத்த நாள் பரிட்சைல 80 மார்க் வாங்கினேன் (அந்த மாணவன் வயது 20. இவன் வயது 35. 20 வயதுல 80 மார்க் வாங்கி இருந்தா ஒத்துக்கலாம். 35 வயசுல?)
"ம்ம்ம்ம்"
"மொத்தம் 25 கதைகள் எழுதி வைச்சிருக்கேன். குறும்படம் தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடிட்டு இருக்கேன்"
"நல்ல விசயம்தான்"
"சினிமா ஸ்டோரி டிஸ்கஷனுக்கு என்ன கூப்பிடுறாங்க. நான் தான் போகாம இருக்கேன்"
"அப்படியா?"
"நான் இண்டர்நெட்ல ரொம்ப பேமஸ் தெரியுமா?"
"அப்படியா?"
"என் பெயரை கூகிளில் போட்டா, நிறைய பக்கங்கள் வரும். வந்து குவியும். பார்த்திருக்கியா?" (பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்னும் குவியலை)
"நான் கூட பிளாக்ல எழுதுறேன் தெரியுமா? படிச்சிருக்கியா" என்றேன்.
"நான் பிளாக் எல்லாம் படிக்கறது இல்லை. அது என்ன சொந்த டைரி மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் குப்பை"
என் கோபம் தலைக்கு மேலே ஏற என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். தலை எழுத்தே என கேட்டுக்கொண்டிருந்தேன்.
"இன்னொரு விசயம் உலக்ஸ். நான் இரண்டு புத்தகம் எழுதி இருக்கேன்"
"அப்படியா! சந்தோசம்"
"இதுவரை இரண்டு பதிப்புகள் வந்துடுச்சு"
"ம்ம்ம்"
"ஒரு கல்லூரி நிறுவனம் மொத்தம் 200 புத்தகம் வாங்கினாங்க"
"அப்படியா? அப்படி என்ன எழுதின, அந்த புத்தகத்துல?"
"ஆபிஸ்ல எப்படி நல்ல பெயர் எடுக்கறது. எப்படி வேலை செய்தால் விரைவில் புரோமோசன் கிடைக்கும். எப்படி மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பது? என்பதை எல்லாம் அந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்கேன்"
"சரி. உன் அலுவலக வேலை எப்படி உள்ளது? ஏதேனும் புரோமோசன் கிடைச்சுதா?"
"இல்லை. நான் வேலையை விட்டு நின்னுட்டேன்"
"ஏன்? என்னாச்சு?"
"எனக்கும், எங்க பாஸுக்கும் ஒத்து வரலை. அதனால போடானு ரிஸைன் பண்ணீட்டேன்"
"இப்போ என்ன பண்ணற?"
"வேலை தேடிட்டு இருக்கேன்"
"நீ எழுதுன புத்தகத்தை முதல்ல நீ ஒழுங்கா படி" என சொல்ல நினைத்து சொல்லாமல் வந்துவிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)