எங்கள் பகுதிக்கு நேற்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வந்திருந்தார். அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக: அவர்தான் மலேசியாவை உலக அளவிற்கு உயர்த்தியவர். அவர் ஒரு மருத்துவர். லங்காவியில் பிறந்தவர் படிப்படியாக முன்னேறி பிரதமரானவர். மலேசியாவை 22 வருடம் தன் பிடியில் வைத்திருந்தவர். தான் உச்சத்தில், நல்ல புகழில் இருக்கும்போதே பிரதமர் பதவியையும், கட்சியின் தலைமை பொறுப்பையும் விட்டுக்கொடுத்தவர். அவர் 2003 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். இப்போது அவருக்கு வயது 86. மூன்று முறை ஹார்ட் சர்ஜரி செய்தவர். இப்பொது பார்த்தாலும் ஒரு கல்லூரி மாணவனைப் போல காட்சியளிப்பவர். 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குபவர். இன்னமும் அவருடைய பேச்சுக்கள், கருத்துகள் மலேசியாவில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அவர் பிரதமராக இருந்த போது அமெரிக்கா போன பொழுது, அமெரிக்காவில் இருந்து கொண்டே அமெரிக்காவை பற்றி விளாசித்தள்ளியவர். அவரைப்பற்றி எழுதவேண்டுமானால், தொடர் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களில் ஒருவர். அவருக்கு வந்த பரிசுப்பொருட்களை மட்டும் வைத்து மிகப் பெரிய பங்களா (Galeria Perdana) லங்காவியில் இருக்கிறது. அதை சுற்றிப்பார்க்கவே பல மணிநேரம் ஆகும்.
அப்படிப்பட்ட மனிதர்தான் நேற்று எங்கள் பகுதிக்கு வந்தார். காலை 8.30க்கு ஒரு அரசாங்க ஹாலில் சொற்பொழிவு, பிறகு சில இடங்களுக்கு விஜயம் செய்தார். நான் வாக்கிங் செல்லும் பகுதியில்தான் அந்த ஹால் உள்ளது. நான் அந்த இடத்தை கடக்கையில் காலை மணி ஆறு. ஒரு போலிஸ் இல்லை. எந்தவிதமான சோதனையும் இல்லை. ரோட்டில் யாருமே இல்லை.அந்த ஹாலை ஒட்டியுள்ள ஒரு சில எலக்ட்ரிக் கம்பங்களில் ஒரு மூன்று அடி அளவில் உள்ள போஸ்டர் தொங்கிக்கொண்டு இருந்தது. எங்கும் ஒரு கட் அவுட் கூட இல்லை. யாரும் அவருக்கு கருப்புக்கொடியோ இல்லை எந்த ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை. மக்கள் மிகச்சாதாரணமாக அவர்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். அவர் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.
நான் ஒரு ஒருமுறை ஒரு முக்கியமான வேலை விசயமாக சென்னை சென்றிருந்த போது அப்போதைய முதல்வர் எங்கோ செல்வதற்காக சாலையில் போலிஸ்காரர்கள் ஒரு மணி நேரம் யாரையும் போக அனுமதிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்கள். திருச்சிக்கோ அல்லது அருகில் உள்ள ஊருக்கோ முதல்வரோ அல்லது பெரும்தலைகளோ வரும் பட்சத்தில் நாங்கள் எல்லாம்.....சரி, வேண்டாம் விடுங்கள்!!!!
இந்தியாவைப் பற்றி சொல்ல எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கிறது.
**************************************************
சந்தோசத்தை அடைய குஷ்வந்த் சிங் என்ன சொல்கிறார் பாருங்கள்:
EIGHT CLUES TO HAPPINESS
By- KHUSHWANT SINGH
Having lived a reasonably contented life, I was musing over what a person should
strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I
put forward for the readers' appraisal.
1. முதலில் தேவையான முக்கியமான விசயம் நல்ல உடல்நிலை. நல்ல உடல்நிலை இல்லை என்றால் உங்களால் சந்தோசமாகவே இருக்கமுடியாது. ஒரு சின்ன தலைவலி கூட உங்கள் சந்தோசத்தை கெடுக்கலாம்.
2. இரண்டாவது, உங்களின் பேங்க் பேலன்ஸ். அதற்காக கோடிக்கணக்கில் உங்களின் சேமிப்பு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்காகவாவது இருக்க வேண்டும். உதாரணமாக குடும்பத்துடன் அடிக்கடி வெளியில் செல்ல, தியேட்டர் சென்று படம் பார்க்க, விடுமுறையை கழிக்க ஒரு மலைப்பிரதேசத்திற்கோ அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த இடத்திற்கோ செல்லவாவது உங்களிடம் பணம் எப்போதும் இருக்க வேண்டும். உங்களிடம் தேவையான பணம் இல்லை என்றாலோ, எப்போதும் கடனுடனே வாழ்க்கை இருந்தாலோ, உங்களால் சந்தோசமாக வாழ்க்கையை வாழமுடியாது.
3. மூன்றாவது உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு சின்ன வீடாவது இருக்க வேண்டும். வாடகை வீடு எப்போதுமே உங்களுக்கு சந்தோசத்தை தராது. அதுவும் உங்கள் வீட்டில் ஒரு கார்டன் வைக்கும் அளவிற்கு இடம் இருந்து, அதில் ஒரு மரமோ செடியோ வைத்து வளர்த்து வந்து அதை தினமும் பராமரித்தீர்கள் என்றால், அதில் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
4. நான்காவது, ஒரு நல்ல பரஸ்பரம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணை அவசியம். அது கணவனோ அல்லது மனைவியோ அல்லது நண்பராக கூட இருக்கலாம். இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து அப்படியே சேர்ந்து வாழும் பட்சத்தில், உங்கள் வாழ்க்கை எப்போது அமைதியாக இருக்காது. கஷ்டப்பட்டு பிடிக்காமல் வாழ்வதைவிட விவாகரத்து எவ்வளவோ மேல்.
5. ஐந்தாவது, நம்மைவிட நல்ல முறையில் பணத்தால், பதிவியால் முன்னேறியவர்களை பார்த்து பொறாமைப்படுவதில் தவறில்லை. ஆனால், முன்னேற எந்த ஒரு முயற்சியும் எடுக்காமால் எப்போதும் அடுத்தவர்களை கம்பேர் செய்து பொறாமைப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு நல்லது அல்ல,
6. ஆறாவதாக, நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் நாம் மற்றவர்களுடைய வெறும் வாயை மெல்வதற்கு அவல் ஆகிவிடக்கூடாது. ஏனென்றால் நாம் விழித்துக்கொள்ளூம் முன்னர் அவர்களுடைய கிசுகிசுப்புகள் பேச்சுகள் நம்மை பலமாக பாதித்திருக்கக்கூடும்.
7. ஏழாவதாக நல்ல சில ஹாபிஸை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது கார்டனிங்காகவோ, புத்தகங்கள் படிப்பதாகவோ, எழுதுவதாகவோ, பெயிண்டிங்காகவோ, விளையாட்டோ அல்லது நல்ல இசையை கேட்பதாகவோ கூட இருக்கலாம். கிளப்புக்கோ அல்லது பார்ட்டிகளுக்கோ சென்று தண்ணி அடிப்பது எல்லாம் நேரத்தை விரயமாக்கக்கூடிய விசயம்.
8. எட்டாவதாக, தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு 15 நிமிடமாவது ஒதுக்கி நாம் நம்மை ஒரு சுயசோதனைபோல் செய்துகொள்வது நல்லது. காலையில் முதலில் ஒரு 10 நிமிடம் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வது நல்லது, என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்? செய்வதெல்லாம் சரியா? அதனால் ஏதேனும் பலன் இருக்கிறதா? அடுத்த ஒரு ஐந்து நிமிடம் இன்று என்ன செய்யவேண்டும்? என்று ஒரு காகிதத்தில் ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அதே போல் மாலையிலும் அதே போல் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொண்டு நம்மை தயார் படுத்திக்கொள்வது எப்போதும் நல்லது.
RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...
"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"
**************************************************
9 comments:
nice
8-ம் அருமை..வாழ்ந்து பார்ப்போம்..
உண்மை
// Cable Sankar said...
nice//
தலைவரே, நன்றி.
//அமுதா கிருஷ்ணா said...
8-ம் அருமை..வாழ்ந்து பார்ப்போம்..//
நன்றி மேடம்.
//நந்தா ஆண்டாள்மகன் said...
உண்மை//
வருகைக்கு நன்றி நண்பா.
அருமை!
முத்தாய்ப்பு ....
RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...
"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"
வெகு ஜோர்
Good post sir
மஹாத்திர் முகம்மத் அன்வர் இப்ரஹீமை அடாவடியாக பொய்க் குற்றம் சாட்டி, சிறையில் தள்ளியதாக படித்திருக்கிறேன்.
உண்மை என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment