கடுமையான வேலைப்பளு. ஆனால் பேங்கிற்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான் ஏஜிஎம் வந்து சென்றிருந்ததால் பேங்கிலும் பரபரப்பு இருந்தது. மேனஜர் டென்ஷனோடு இருப்பார். தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என நினைத்து அவரின் ரூமை நெருங்கினேன். அவர் ரொம்ப கூலாக பேச ஆரம்பித்தார்.
"சாரி சார்! ரொம்ப பிஸியா இருப்பீங்க போல. அப்புறம் வரட்டா?"
"என்ன பிஸி. உக்காருங்க. டென்ஷனா இருக்குங்கிறதுதுக்காக நம்ம இயல்பு மாறக்கூடாது. எப்பவும் போல் சந்தோசமாக இருக்க வேண்டும்" என்றவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார்.
அவர் உதிர்த்த சில ஜோக்குகள்:
ஜோக் 1:
ஒருவர் எங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பத்தை சரி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சரி, அவரிடமே கேட்கலாம் என நினைத்து, அவருக்கு தொலை பேசி இருக்கிறார்,
"சார், நான் பேங்கிலிருந்து பேசறேன். உங்க விண்ணப்பத்துல ஒரு சந்தேகம் இருக்கு சார். கொஞ்சம் பேசலாமா?"
"சார், நான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன். அப்புறம் பேசலாமே?"
"அதனால என்ன? வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேசுங்க"
"சார், அது முடியாது"
"ஏன்"
"டிரையினை எப்படி ஓரமா நிறுத்த முடியும் சார்"
அவர் ரயில் இன்ஜின் டிரைவர் என்பது அப்புறம் தான் ஆபிஸருக்கு தெரிந்திருக்கிறது.
**********************************************************
ஜோக் 2:
"சார், உங்க பையன் படிப்பை முடிச்சுட்டானா?"
"முடிச்சிட்டான்"
"மேலே படிக்கிறானா?"
"ம்ம்ம் படிக்கிறான்"
"என்ன படிக்கிறான்?"
"ஏதோ அரியர்ஸாம், அதான் படிக்கிறேன்னான்"
**********************************************************
ஜோக் 3
படித்ததில் பிடித்தது. எழுதியவர் பெயர் மறந்துவிட்டது:
"ஏங்க, சக்கரை இல்லைங்கறதுக்கு சந்தோசப்படாம இதுக்குப் போய் வருத்தப்படறீங்க"
"ஹலோ, ரேஷன்ல சக்கரை இல்லைனுட்டாங்க!!!
**********************************************************
கேட்டதில் பிடித்தது:
உலகத்துல மனச்சிதைவு நோய் ரெண்டு பேருக்கு மட்டும் வராது?
யார் யார்?
ஒருத்தன் இன்னும் பொறக்கலை. இன்னொருத்தன் ஏற்கனவே செத்துப்போய்ட்டான்.
- பெரியார்தாசன்.
**********************************************************
நண்பர் இறப்பதற்கு முதல் நாள் இரவு, சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டபோது, அவரை உடனே ஆஸ்பிட்டல் கூட்டிப்போகலாமா? இல்லை காலையில் கூட்டிப்போகலாமா? என நிறைய யோசித்துருக்கிறார்கள். டிரிங்ஸ் சாப்பிட்ட நிலையில் கூட்டிச்சென்றால், டாக்டர் திட்டக்கூடும் என்பதால் அடுத்த நாள் காலை கூட்டிச்செல்லலாம் என நினைத்து விட்டுவிட்டார்கள். அதிகாலை நண்பர் இறந்துவிட்டார். அவனின் அப்பா என்னிடம்,
"இரவே கூட்டிச் சென்றிருக்கலாம். சென்றிருந்தால் பிழைத்திருப்பானோ?" என அழுதார்.
அதற்கு நண்பர் என்னிடம்,
"அப்படித்தான் நடக்கும். எப்போதுமே எமதர்மன் தன் மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வான்"
உண்மையாக இருக்குமோ?
**********************************************************
நேற்று ஒரு இடத்தில் பிளாட் பார்க்க சென்றிருந்தோம். மாலை 6 மணி இருக்கும். நானும் என் இன்ஜினியரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு லுங்கி, பனியனுடன் வந்தார்.
"யார் நீங்க? எதுக்கு வந்தீங்க? இங்க எதுக்கு நிக்கறீங்க?"
எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே,
"உங்களுக்கு என்ன? நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? இந்தியால நான் எங்க வேணா வருவேன் போவேன்"
என்னை நிமிர்ந்து பார்த்தவர்,
"பிளாட் பார்க்க வந்தீங்களோனு நினைச்சேன்" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
நண்பர், "வாங்க, இந்த நிலத்து ஓனர் யாருனு அவர் கிட்ட கேட்கலாம்?"
வேறு வழியில்லாமல் அவரிடம் சென்று கேட்டோம்.
'யாருங்க இங்க பிளாட் போடறது?"
"நாந்தான். அதான் உங்களை கேட்டேன்"
அசடு வழிந்து வந்தேன்.
நண்பர் வேறு, "என்ன உலக்ஸ், அவர் கேட்ட முறை தப்பா இருக்கலாம். ஏன் கோபப்பட்டீங்க? அதனாலதான் அவர் கிட்ட பேச சொன்னேன்"
இப்படித்தான் சில சமயம் ஆகிவிடுகிறது.
**********************************************************
6 comments:
மிக்சர் சூப்பர்...
மிக்சர் நல்லா இருக்குங்க..
//மிக்சர் சூப்பர்...//
வருகைக்கு நன்றி செந்தில்.
//மிக்சர் நல்லா இருக்குங்க..//
நன்றி இராமசாமி.
மிக்சர் சூப்பர்
//மிக்சர் சூப்பர்//
நன்றி டிவிஆர் சார்.
Post a Comment